தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அரங்கேற்றப்படும் அகவை

துர்கா

நினைவுகள்!
எனக்கு!
உரித்தாக்கப்பட்டுவிட்டன!
தயவு செய்து தஞ்சம் புகுந்துவிடு!
ஒவ்வொரு கணமும், நாளும்!
உனக்காகத் தான் பிறக்கின்றன!
சத்தமின்றி ஆரவாரிக்கும்!
எனதிதயம்,!
தடுமாறும் உனது நினைவேட்டில்!
ஏதேதோ!
பிதற்றுதல்கள்!
பொருளற்ற மொழியாகின்றன!
நித்தமும்!
ஓடிக்கொண்டே இருக்கும்!
நினைவுகள் இளைப்பாறும்!
நிழலாய் உனைத் தேடுகிறது!
ஏக்கமுடன்.....!!
!
-துர்கா

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

உதட்டு வரிகள்

ரா. சொர்ண குமார்

உதட்டு வரிகள்!
கவிதைக்கு!
எத்தனை வரிகள்!
கட்டாயம் இரூக்க வேண்டும் ?!
கேள்விக்கு!
பதில் தெரியவில்லை...!
எண்ணிக்கொள்ளவா!
உன் உதட்டு வரிகளை ?!